Sunday, January 3, 2010

மலரும் நினைவுகள்
நேரம் அறியாமல்
நானும், நீயும் வரப்புகளில்
கை கோர்த்து நடந்த நாட்கள்

மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு
நிலவின் கண்ணாமூச்சி விளையாட்டை
ரசித்த நாட்கள்
தட்டான் பூச்சி பிடித்து
வாலில் நூல் கட்டி
விளையாடிய நாட்கள்

உனக்கு முடியாமல் போன நாட்களில்
இருவருக்கும் விடுப்பு எழுதி
உன் அருகிலேயே இருந்த நாட்கள்

விடுமுறை என அறிந்ததும்
நமது பெயர்களை
மரத்தின் பின்னே எழுதி
திரும்பி வரும் போது
அவற்றைப் பார்த்து
குதூகலித்த நாட்கள்
இத்தனை சந்தோஷ நாட்கள் கூட
இயந்திர வாழ்க்கையில்
மறந்து விட்ட்து

இன்று தன் அப்பாவின்
கை பிடித்துச் செல்லும்
உன் குழந்தையைக் கண்டேன்

மறுபடியும்
என் எண்ணங்கள்
மலரும் நினைவுகளில்

Saturday, January 2, 2010

நிலாப்பெண்
மேக அலைகளுடன் போராடி
கரையை அனுகத் துடிக்கும்
நிலாப்பெண்ணே
திடீர் திடீரென
மறைகின்றாயே
அவ்வலைகள் விண் கடலினுள்
அமிழ்த்து விட்டனவோ
அருகே கண் சிமிட்டிச் சிரிக்கும்
அழகிய விண்மீன்கள்
இறுக்கும்போது பயமேன்
சுரிய மீனவன்
தன் கதிர்த் தூண்டிலை
விண்கடலில் வீசும் போது
நீயும் விண்மீன்களும்
மறையும் மாயமென்ன
மாமியார் கொடுமை
நாளை மாமியார் வீட்டு
ஸ்டவ் வெடிக்கப் போகிற்து
ஏனென்றால்
மருமகள் வீட்டிற்கு
வந்து விட்டாலன்றோ
புயல்
புயலே!
நீ
உன் வீராவேசத்தை
காட்டி விடாதே
வேகமாக வீசி
என்ன சாதிக்க போகிறாய்
உயிர்களுக்கு துன்பம்
தருவதில் தான்
உனக்கு மகிழ்ச்சியோ
சென்று திரும்பும் போது
தென்றலாகவே இரு
பொறுதார் பூமி ஆழ்வார்
அனுமனின் தந்தையாகி
அபிமன்யு சுந்தரிக்கு
தூதனாக விள்ங்கிய
காற்றே
நீ
தென்றலாவதற்கு என் வாழ்த்துக்கள்
வேலை
எனக்கு வேலை கிடைத்து விட்டது
எனக்கு வேலை கிடைத்து விட்டது
வேலையில்லை
வேலையில்லை
என்று சொல்லித்திரிவது தான்
என் வேலை
சம்பளமும் உண்டு
அப்பாவின் அலறல்கள்
மழை
ஏழைகளின் கண்ணீர் துளி
மண்ணில் விழுமுன்
நீ
பெய்து விடு
இல்லையேல்
கண்ணீர் ஆறு
உன்னை கடலினுள்
தள்ளி விடும்
ஜாக்கிரதை
ஏழை ஒருவன்
வியர்வையை தண்ணீராய்
இறைத்தான்
மழை வரும் மழை வரும்
அந்தோ பரிதாபம்
காற்று மேகத்தை
கலைத்து விட்ட்தே
இனி
வியர்வைக்குப் பதில்
கண்ணீரை இறைக்க வேண்டியது தான்