Saturday, January 2, 2010

நிலாப்பெண்
மேக அலைகளுடன் போராடி
கரையை அனுகத் துடிக்கும்
நிலாப்பெண்ணே
திடீர் திடீரென
மறைகின்றாயே
அவ்வலைகள் விண் கடலினுள்
அமிழ்த்து விட்டனவோ
அருகே கண் சிமிட்டிச் சிரிக்கும்
அழகிய விண்மீன்கள்
இறுக்கும்போது பயமேன்
சுரிய மீனவன்
தன் கதிர்த் தூண்டிலை
விண்கடலில் வீசும் போது
நீயும் விண்மீன்களும்
மறையும் மாயமென்ன

No comments: